தமிழ்நாடு திருமண பதிவு சட்டம் 2009 இன் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருமணங்களும் சட்டபூர்வமாக பதிய வேண்டும் என கட்டாயம் செய்யப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் அனைவரும் திருமணத்தை பதிவு செய்கிறார்கள் 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பினால் திருமண சான்று முக்கியமாக கருதப்படுகிறது இந்த சான்று பெண்களுக்கு முன்னுரிமை பாதுகாப்பை அளிப்பதற்காக கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது
திருமண பதிவு தமிழ்நாட்டில் செய்வதன் மூலம் அரசால் கிடைக்கப்பெறும் சலுகை மற்றும் அதன் முக்கியத்துவம்
குடும்ப அட்டை விண்ணப்பிக்க மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகை திட்டத்திற்கும் மற்றும் வெளிநாடு செல்வதற்கு இந்த திருமண சான்று முக்கியமாக ஆவணமாக கருதப்படுகிறது ஒருவர் திருமணம் ஆனார் என்பதற்கு உரிய அடையாளச் சான்றாகும் மற்றும் சமையல் எரிவாயு விண்ணப்பிக்க மற்றும் வங்கி கணக்கு திறப்பதற்கு இந்த சான்று பயன்படுகிறது
0 கருத்துகள்